சமையல் எரிவாயு விநியோகத்தில் (LPG Delivery) புதிய வகை மோசடி அதிகரித்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. குறிப்பாக இண்டேன் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரிகிறது.
மோசடி நடப்பது எப்படி? (lpg delivery otp fraud alert): சிலிண்டர் டெலிவரி செய்பவர் போல உங்களை அழைக்கும் மோசடி கும்பல், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி-யைக் கேட்கும். நீங்கள் அந்த எண்ணைக் கொடுத்தவுடன், உங்கள் வங்கி கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட் மூலம் பணத்தைத் திருடுவதே இவர்களின் நோக்கம். முன்பதிவு செய்த சிலிண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றால் கூட ஓடிபி பகிர வேண்டாம் என்று நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.
இதுவும் படியுங்கள்: பிக்சல் 11-ஐ விடுங்க! பிக்சல் 12 இப்போதே ரெடி! கூகுளின் டென்சர் G7 சிப்செட் ரகசியங்கள் இதோ!
பாதுகாப்பாக இருப்பது எப்படி? (how to avoid lpg delivery scam): சிலிண்டர் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது மட்டுமே அதிகாரப்பூர்வமான ஓடிபி-யைப் பயன்படுத்தவும். தேவையற்ற லிங்க்குகளை கிளிக் செய்வதோ அல்லது போனில் ஓடிபி சொல்வதோ கூடாது. இதுபோன்ற சைபர் மோசடிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே பணத்தை இழக்காமல் தப்பிக்க முடியும்.
முழு விவரங்களை இங்கே படிக்கவும்:
